நொய்டா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனைவியை கொன்னுட்டாங்க... அவசர போலீசுக்கு வந்த போன் - காத்திருந்த அதிர்ச்சி

ஹலோ அவசர போலீஸ் நூறுங்களா... என் மனைவியை பலாத்காரம் செய்து கொண்டுட்டாங்க சார் என்று ஒருவர் போன் செய்து புகார் கொடுக்கவே பதறியடுத்துக்கொண்டு ஓடிய போலீசுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த ப

Google Oneindia Tamil News

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள இலகாபாஸ் கிராமத்தில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவசரம் அவசரமாக போன் ஒன்று வந்தது. பதறியடித்துக்கொண்டு பேசிய ஒரு நபர், எனது மனைவியை பலாத்காரம் செய்து கொன்று விட்டார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு காவல்துறையினரும் அந்த கிராமத்திற்குப் போகவே செத்துப்போனதாக கூறப்பட்ட அந்தப்பெண் நலமாக நடமாடிக்கொண்டிருந்தார்.

அலோ அவசர போலீஸ் நூறுங்களா என்று கேட்டு போலீசை அலறவைத்த அந்த நபரின் பெயர் நரேஷ் சிங் என்பதாகும். 30 வயதாகும் அந்த நபர் இன்று அதிகாலை 5 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். காலையிலேயே போனை எடுத்தவர்களிடம் பதற்றமாக பேசிய நபர் தனது மனைவியை ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக கூறி புகார் அளித்தார்.

Man Complained Of Wife Murder in Noida

அதைக் கேட்டு அவசரம் அவசரமாக அந்த கிராமத்திற்கு ஒரு போலீஸ் படையே போனது. போன பின்னர்தான் தெரிந்தது அது பொய்யான போன் என்று தெரியவந்தது. சிலருக்கு எதிலெல்லாம் விளம்பரம் தேடுவது என்று இருக்காது. மனைவி இறந்து விட்டதாக கூறி விளம்பரம் தேடுகிறார்கள் பாருங்கள். காலங்காத்தால எங்களை அலைய விட வந்துட்டாண்டா என்று தலையில் அடித்துக்கொண்டனர்.

அப்புறம் என்ன அந்த நரேஷ் சிங்கை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ். இந்திய தண்டனைச்சட்டம் 107, 116, 151 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English summary
Naresh Singh was arrested for reporting a false complaint and misguiding police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X