நொய்டாவில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபர் தற்கொலை
நொய்டா: நொய்டாவில் 22 வயது வாலிபர் தனது காதலியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்ஷாஹரை சேர்ந்தவர் மோஹித்(22). அவர் காசியாபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார்.
அவருடன் படித்து வந்த மாணவியும், அவரும் காதலித்தனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நொய்டாவில் உள்ள கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மோஹித் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டார். பின்பு மோஹித் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். மோஹித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைக்கு மேல் டிக் மார்க்.. மாஜி அமைச்சரின் குடும்பத்துக்கே குறியா?.. புதுவையில் ரவுடிகளால் பரபரப்பு
அந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோஹித்துக்கு துப்பாக்கி எப்படி கிடைத்து என்று விசாரித்து வருகிறார்கள்.