பிரான்சில் அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ அவசர நிலை நீட்டிப்பு.. பல நாடுகள் பின்பற்ற வாய்ப்பு
பாரிஸ் : பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஜுலை 24ம் தேதி வரை மருத்துவ அவசர நிலை ( ஊரடங்கு) நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார துறை ஒலிவியர் வேரான் தெரிவித்தார்.
Recommended Video
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் மருத்துவ அவசர நிலை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது ஜுலை 24ம் தேதி அதாவது மேலும் இரண்ட மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த புதிய மசோதா விதிகளின் படி பிரான்ஸ்க்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் (குவாரண்டைனில்) இருக்க வேண்டும்.
ஐரோப்பாவின் திறந்த-எல்லையான ஷெங்கன் பகுதிக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே இந்த தனிமைப்படுத்தல் பொருந்துமா, அவர்கள் வீட்டிலோ அல்லது ஹோட்டல்களிலோ சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமா, எவ்வளவு காலம் நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும், மேலும் 167,346 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் 24,594 பேர் இறந்துள்ளனர் .
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது உட்பட மே 11 முதல் சில ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடைகளை மந்தநிலைக்குத் தள்ளிய கொரோனா வைரஸால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து போராடும் விதமாக பிரான்ஸ் பல கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. தொலைதூர அலுவலக ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப பணிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.