பிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ!
பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது என்று பிரதமர் மோடி பாரீஸில் இந்திய மக்கள் முன்னிலையில் பேசி இருக்கிறார்.
Recommended Video
பாரீஸ்: பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது என்று பிரதமர் மோடி பாரீஸில் இந்திய மக்கள் முன்னிலையில் பேசி இருக்கிறார்.
பிரான்ஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த நிலையில் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன்னிலை பேசினார்.
கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் நடந்த மாற்றம் குறித்து மோடி பேசினார். அதேபோல் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான உறவு குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
என்ன உறவு
பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா பிரான்ஸ் இடையிலான உறவு என்பது சாதாரண உறவு கிடையாது. இரண்டு நெருக்கமான நண்பர்களுக்கு இடையிலான உறவு போன்றது அது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது பல வருடங்களாக இப்படி நெருக்கமாக இருக்கிறது.
பிரான்ஸ் எப்படி
பிரான்ஸ் முழுக்க எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது. ராம் என்ற பெயர் எனக்கு இங்கு எதிரொலிக்கிறது. எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் வருடத்தில் இப்படி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அவரின் சிலை வழிபாடு நடத்துவேன்.
விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி பெரிய அளவில் நடக்கிறது. இன்னும் சில வருடங்களில் பிரான்ஸிலில் அப்படி நடக்கும். பிரான்சிலும் கூட கணபதி பப்பா மோரியா என்று மக்கள் கோஷம் இடும் நாள் வெகு தொலைவில் இல்லை, என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
|
கூச்சல்
இதையடுத்து அங்கு இருந்த இந்தியர்கள் கணபதி பப்பா மோரியா என்று கோஷமிட்டனர். அதன்பின் வரிசையாக அவர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்றனர். பின் எல்லோரும் சேர்ந்து மோடி, மோடி, மோடி என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.