எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு!
நாங்கள் புதிய இந்தியாவை வேகமாக உருவாக்கி வருகிறோம், எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது என்று பிரதமர் மோடி பிரான்சில் பேசி இருக்கிறார்.
Recommended Video
பாரீஸ்: நாங்கள் புதிய இந்தியாவை வேகமாக உருவாக்கி வருகிறோம், எங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது என்று பிரதமர் மோடி பிரான்சில் பேசி இருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடி தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனை சந்தித்தார். இந்த நிலையில் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் பேசினார்.
பிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ!
என்ன பேசினார்
பிரதமர் மோடி தனது பேச்சில், புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். நான் இப்போது கால்பந்து விளையாடும் மக்களின் தேசத்தில் இருக்கிறேன். கோல் எடுப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும். கோல் எடுப்பதுதான் கால்பந்து வீரருக்கு ஒரே குறிக்கோள். எங்களுக்கும் அப்படித்தான் முக்கியமான கோல் நிறைய இருக்கிறது.
எப்படி ஆட்சி
கடந்த 5 வருடங்களில் நாங்கள் பல இலக்குகளை அடைந்து இருக்கிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உயிர் துறந்த மக்களுக்கும், சாதனையாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய இந்தியா எப்படி
நாங்கள் வெற்றிபெற்ற பின் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். எங்கள் புதிய இந்தியாவில் வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல், குடும்பம் அரசியல், திருட்டு, மக்கள் பண முறைகேடு, தீவிரவாதம் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
சிறப்பு
இதற்கு முன் நாங்கள் எந்த அரசும் இந்தியாவில் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டது கிடையாது. கடந்த 75 நாட்களில் இந்தியாவில் நாங்கள் பல அதிரடி விஷயங்களை நிறைவேற்றி இருக்கிறோம், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.