பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: பிரசாரத்தின் போதே வேட்பாளர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை- கொலையாளியை அடித்தே கொன்ற ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை நாராயண்சிங் ஆதரவாளர்கள் அடித்தே கொலை செய்தனர். இந்த சம்பவங்களால் பீகார் தேர்தல் களத்தில் பதற்றம் நிலவுகிறது.

பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் பீகார் தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கிறது. பொதுவாக வன்முறைகள் இல்லாமல்தான் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது.

Bihar candidate shot dead-one accused lynched

இந்த நிலையில் சனிக்கிழமையன்று சியோஹர் தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சுயேட்சை வேட்பாளர் நாராயண்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது ஆதரவாளர்கள் 2 பேரில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப்! யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா?அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப்! யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா?

மேலும் நாராயண்சிங்கை சுட்டுக் கொன்ற கொலையாளியை சுற்றி வளைத்து பிடித்த ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்தே கொலை செய்தனர். இச்சம்பவத்தில் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வரும் அபய்குமார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நாராயண்சிங்கை நோக்கி சரமாரியாக சுட்டது. அவரை காப்பாற்ற முயன்றோம். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றார்.

English summary
An independent candidate Narayan Singh who contesting from Sheohar assembly constituency was shot dead on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X