மீட்டிங்கால் வந்த அச்சம்.. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட நிதிஷ் குமார்.. ரிசல்ட் நெகட்டிவ்!
பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா காரணமாக மொத்தம் 6.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் மட்டும் 11457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 88 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. பீகார் மாநில சட்ட மேலவை தலைவர் அவடேஷ் நாராயன் சிங்கிற்கு நேற்று காலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முதல்நாள்தான் அவடேஷ் நாராயன் சிங் நிதிஷ் குமார் உடன் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார் .
கொரோனா.. மகாராஷ்டிராவில் 2 லட்சம் பேர் பாதிப்பு.. நாடு முழுக்க 6.7 லட்சம் பேர் பாதிப்பு.. அதிர்ச்சி!
இதனால் அவடேஷ் நாராயன் சிங் மூலம் நிதிஷ் குமாருக்கு கொரோனா பரவி இருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிதிஷ் குமாருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. முதல்வர் நிதீஷ் குமாருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா பரவில்லை, நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.