பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா உறுதி.. பாட்னா எய்ம்ஸ் இல் அனுமதி
பாட்னா: பாஜக மூத்த தலைவரும், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சுமார் 75 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
சாமானிய மக்கள் முதல் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்,
இந்நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்
இதுதொடர்பாக சுஷில் குமார் மோடி தனது டுவிட்டரில், பரிசோதனையில் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இயல்பாக உள்ளேன். லேசான காய்ச்சல் மட்டுமே இருக்கிறது., பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 2நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறேன். சிடி ஸ்கேனில் நுரையீரல் நார்மலாக உள்ளது, விரைவில் குணமடை