பீகார்: கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுத் தாக்கல்: 9 மூத்த பாஜக தலைவர்கள் டிஸ்மிஸ்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிரான வேட்புமனுத் தாக்கல் செய்த 9 மூத்த தலைவர்களை பாஜக டிஸ்மிஸ் செய்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக பாஜக 115 இடங்களிலும் ஜேடியூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி தனித்தே போட்டியிடுகிறது. குறிப்பாக பாஜக கூட்டணி வைத்திருக்கும் ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பீகார் தேர்தல்: பி.கே. ஆலோசனையில்தான் பாஸ்வான் மகன் குடைச்சல் கொடுக்கிறாரோ? ஜேடியூ சந்தேகம்!
இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்த 9 மூத்த தலைவர்களை 6 ஆண்டுகாலத்துக்கு பாஜக மேலிடம் டிஸ்மிஸ் செய்திருக்கிறது. இதில் அண்மையில் லோக் ஜனசக்தி கட்சிக்கு தாவிய ராஜேந்திரசிங், உஷா வித்யாத்ரி ஆகியோரும் அடங்குவர்.