ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!
பாட்னா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை மிஞ்சும் வகையில் பீகாரில் சீதாவுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் சூழலில் முதற்கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிடும் சூழலில், அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் சீதாமர்ஹியில் உள்ள சீதா தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், சீதாதேவி பிறந்த இடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் பிரம்மாண்ட கோயில் எழுப்பப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்தார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை விட புராண நகரமான சீதாமர்ஹியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சீதா இல்லாமல் ராமர் இல்லை என்றும் அதனால் இதனை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை எனவும் சிராக் பாஸ்வான் கூறினார். மேலும், சீதாமர்ஹியையும் அயோத்தியையும் இணைக்கும் வகையில் புதிய பாதை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
RJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா...? உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..!
தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை முடித்துள்ள சிராக் பாஸ்வான், ஆன்மிகத்தில் சற்று அதிகம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.