பீகாரில் நாளை முதல் ஜூலை 31வரை முழு லாக்டவுன் - வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்
பாட்னா: கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்த நிலையில் நாளை முதல் ஜூலை 31-ந் தேதி வரை பீகார் மாநிலத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.
பீகாரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,853 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக உள்ளது. பீகாரில் தற்போது ஒரே நாள் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு லாக்டவுனை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் நாளை வியாழக்கிழமை முதல் ஜூலை 31-ந் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும்.
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா
இந்த லாக்டவுன் காலத்தில் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி அறிவித்துள்ளார்.
Comments
English summary
Total lockdown will be imposed in Bihar from 16 to 31 July.