பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.! ராகுல் பேட்டி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில துணை முதல்வரான சுஷில் குமார் மோடி சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், அரசியலமைப்பை காப்பாற்றும் தனது போராட்டம் தொடரும் என்றார்.

முன்னதாக மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பிரச்சார கூட்டம் ஒன்றில் தமக்கு ஒரு கேள்வி எழுகிறது. திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் ஏன் இருக்கிறது என வினவினார்.

If talk against RSS and Modi ideologies cases filed.. Rahul Gandhi interview

வங்கி கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளில் பதுங்கிய நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்தார் ராகுலின் இந்த பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்தது ஏனெனில் பீகார் மாநிலத்தில் மோடி என்ற பெரிய சமூக மக்கள் வசித்து வருகின்றனர்

அவர்கள் மத்தியில் ராகுலின் பேச்சு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் அம்மாநில துணை முதல்வராக உள்ள சுஷில் குமார் மோடியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ராகுலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்

அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய பிரதமர் மோடி ராகுல் தன்னை அவமதிப்பாக கூறி கொண்டு ஒட்டுமொத்த மோடி சமூகத்தை கேவலமாக பேசி விட்டார் என குற்றம்சாட்டினார்

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கை விசாரித்த பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது

இதனையடுத்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது இதனையடுத்து அந்த மனுவை விசாரித்த பாட்னா நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது

ஜாமின் கிடைத்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடியின் சித்தாந்தத்திற்கு எதிராக யார் நிற்கிறார்களோ அவர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் பாய்கின்றன. ஜனநாயகத்தின் குரல்வளையை அவர்களால் நெறிக்க முடியாது. மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்

அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து அவர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என சாடினார். எனது போராட்டம் அரசியலமைப்பை காப்பாற்றும் குறிக்கோளை கொண்டதாகும். மேலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக துணை நிற்பது தான் என்றார்.

English summary
Patna court granted bail to Congress leader Rahul Gandhi in a defamation case filed on behalf of Bihar's deputy chief minister Sushil Kumar Modi. Speaking to reporters at the court premises, Rahul said his fight to defend the constitution would continue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X