என்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்
கண்ணீரை துடைத்தபடி வீட்டை விட்டு வெளியேறுகிறார் லாலு மருமகள்
பாட்னா: என்னாச்சுன்னே தெரியல.. லாலு பிரசாத் மருமகள் கதறி அழுதவாறும்.. துப்பட்டாவில் கண்ணீரை துடைத்துக் கொண்டும்.. வீட்டை விட்டு வெளியே வரும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் போன வருடம் மே மாதம் கல்யாணம் நடந்தது.
தம்பதிக்குள் தகராறு அடிக்கடி வந்துவிட்டது.. இதற்கு ஐஸ்வர்யா சொன்ன காரணம், தன் கணவர் போதைக்கு அடிமையானவர் என்பதுதான். அது மட்டுமில்லை.. அடிக்கடி தன்னை சிவனின் அவதாரம் என்று சொல்லி கொள்வாராம்.
இவர்களுக்குள் தகராறு அதிகமாக, கல்யாணம் ஆன 6 மாசத்திலேயே டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலையும் தேஜ் பிரதாப் மிதிக்க நேர்ந்தது. எனினும் 2 பேரையும் சமாதானம் செய்து ஒன்றாக வாழ வைக்க இரு வீட்டு பெரியவர்களும் முயற்சி மேற்கொண்டனர்.
எனக்கு கட் அவுட் வைக்க எப்போதுமே நான் அனுமதித்ததில்லை.. வைகோ பளீச் பேட்டி
இந்நிலையில் மருமகள் ஐஸ்வர்யா ராய், அழுதுகொண்டே லாலு வீட்டில் இருந்து வெளியேறும் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யா கையில் சூட்கேஸ் உள்ளது. கதறி அழுதபடி, துப்பட்டாவில் கண்ணீரை துடைத்தபடியும் வெளியே வருகிறார். இந்த போட்டோதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேஜ் பிரதாப் மீது ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அளித்த புகாரில் கணவர் தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்றும் தன்னை சிவனின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பலவகை போதை பொருட்களை உட்கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கும் லாலுவுக்கு இது அடுத்த சோதனையாக எழுந்துள்ளது!