பீகாரில் சரித்திரம் படைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்- 29-ல் போட்டியிட்டு 16 இடங்களில் அமோக வெற்றி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய சரித்திரம் படைத்திருக்கின்றன. இம்மாநிலத்தில் 29 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வென்று செங்கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
பீகார் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்க்கு பெற்றிருந்தது இல்லை. திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என்றுதான் கம்யூனிஸ்டுகளின் இருப்பு இருந்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில்தான் எம்.எல்.ஏக்கள் இருந்து வந்தனர். இந்த முறை ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து 29 தொகுதிகளில் கம்யூனிஸ்டுகள் போட்டியிட்டன. இதில் 16 இடங்களை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி உள்ளனர்.
பீகாரில் அத்தனை பெரிய கட்சிகளும் தீண்டதகாதவர்களாக நடத்தின- 'கிங் மேக்கராக' உருவெடுத்த ஓவைசி
சிபிஐஎம்எல் கட்சி அதிகபட்சமாக போட்டியிட்ட 19 இடங்களில் 12-ல் வெற்றி பெற்றிருக்கிறது. சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா 2 தொகுதிகளில் வென்றிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் கம்யூனிஸ்டுகளி செங்கொடி இப்போது பட்டொளி வீசி பறக்கிறது.