எல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்
பாட்னா: பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய் முதல்வர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படுவது உறுதி என்று அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
பீகார் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக- ஜேடியூ அணியில் நிதிஷ்குமார், சுஷில்மோடி என மூத்த அரசியல்வாதிகள் பிரசார பீரங்கிகளாக இருக்கின்றனர். இவர்களை எதிர்த்து இளைய தலைமுறையினரான தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் ஆகியோர் பம்பரமாக சுழல்கின்றனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்
டார்கெட் நிதிஷ்குமார்
இளையதலைமுறை தலைவர்களான தேஜஸ்வியும் சிராக் பாஸ்வானியும் ஒரே அணியில் இல்லாமல் இருந்தாலும் இருவரது இலக்கு ஒன்றுதான்.. நிதிஷ்குமார்தான். இவர்கள் எழுப்புகிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நிதிஷ்குமார் மிகவும் திணறுவதையும் பார்க்க முடிகிறது.
அலைமோதும் கூட்டம்
பீகாரில் கடலே இல்லை; துறைமுகமே இல்லை என்பதால் தொழிற்சாலைகளை அமைக்க முடியவில்லை; உங்களுக்கு எல்லாம் அனுபவே இல்லை இப்படியான பதில்களைத்தான் நிதிஷ்குமார் தரப்பு கூறிவருகிறது. தேஜஸ்வி, சிராக் பாஸ்வான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.
சிராக் பாஸ்வான் எச்சரிக்கை
தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளுக்கும் இந்த இரு இளைஞர்களுக்கு கூடும் கூட்டமும் முரண்பாடாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தும்ரோன் என்ற இடத்தில் பிரசார கூட்டத்தில் சிராக் பாஸ்வான் பேசியதாவது: லோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரின் அத்தனை ஊழல்களையும் விசாரிப்போம். நிச்சயம் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவோம்.
பாஜகவுக்கு ஓட்டு போடுங்க
குறிப்பாக நிதிஷ்குமாரின் 7 அம்ச திட்டம் தொடர்பான தீவிரமாக விசாரிப்போம். ஆகையால் நிதிஷ்குமாரின் பிடியில் இருந்து பீகாரை விடுதலை செய்வோம். எல்ஜேபி போட்டியிடாத இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு அனைவரும் வாக்களியுங்கள். இவ்வாறு சிராக் பாஸ்வான் பேசினார்.