பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே அதிக இடங்களை அள்ளும்: என்டிடிவி கருத்துக்கணிப்பு
Recommended Video
பாட்னா: பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என என்டிடிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி(இன்றுடன்) முடிவடைந்தது.
தேர்தல் முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை அனைத்து தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் ,இன்று மாலையில் இருந்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மற்றும் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் தலைமையினா ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி.. காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே.. என்டிடிவி எக்ஸிட் போல்
இதில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 31 இடங்களை கைப்பற்றும் என என்டிடிவி தெரிவித்துள்ளது.
இதேபோல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி மொத்தம் 9 இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் என்டிடிவி இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.