பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன நடக்குது.. பாரத் மாதா கீ ஜே என்ற மோடி.. வேண்டாவெறுப்பாக பார்த்த நிதிஷ் குமார்.. பகீர் வீடியோ!

பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அங்கு அமைதியாக அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பாட்னா: பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அங்கு அமைதியாக அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் இன்று காலை அவர் பீகாரில் உள்ள தர்பங்கா நகரில் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

'டீக்கடைக்காரர்' அவதார் சிங் டெல்லியில் மேயரானார்... பிரதமர் மோடி வாழ்த்து 'டீக்கடைக்காரர்' அவதார் சிங் டெல்லியில் மேயரானார்... பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

இதில் காங்கிரஸ் மீது நிதிஷ் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது பேச்சின் முடிவில் மோடி ''ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. வந்தே மாதரம்.. வந்தே மாதரம்.. பாரத் மாதா கீ ஜே'' என்று கோஷமிட்டார். மீண்டும் மீண்டும் அவர் இதை கூறினார். அவரை தொடர்ந்து தொண்டர்களும் கோஷமிட்டனர்.

ஏன் இறுக்கம்

அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் கோஷமிட்டனர். ஆனால் நிதிஷ் குமார் மட்டும் இதில் அமைதியாக இருந்தார். அதோடு மிகவும் இறுக்கமாக தனது முகத்தை வைத்து இருந்தார்.

மோடி எப்படி

மோடி எப்படி

எல்லோரும் மோடியுடன் சேர்ந்து கூச்சலிடும் போது, ஹாலிவுட் படமே பார்க்காமல் முதல்முறையாக ''அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்'' படத்திற்கு சென்ற ரசிகர் போல வேண்டா வெறுப்பாக நிதிஷ் குமார் அமர்ந்திருந்தார். சீக்கிரம் கோஷம் போட்டு முடிங்க நான் வீட்டுக்கு போகணும் என்பது போல அவர் தனது முகத்தை வைத்து இருந்தார். அதோடு மோடி கோஷத்தை தொடர்ந்து எல்லோரும் எழுந்து நின்று கோஷமிட்டார்கள்.

வீடியோ வைரல்

வீடியோ வைரல்

ஆனால் நிதிஷ் குமார் கொஞ்சமும் அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் எழுந்த பின் வேண்டாவெறுப்பாக எழுந்து நின்றார். இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. பீகாரில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறதா என்று பலர் இதனால் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

English summary
Nitish Kumar's Silent in Modi Bihar Rally makes a huge sound in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X