முக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ
Recommended Video
பாட்னா: பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82), உடல் நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலமானார்.
ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராகும். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.
ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கு, கடந்த 21ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அப்போது, விதிமுறைப்படி, 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.
போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட முயன்றபோது, எந்த துப்பாக்கியும் சுடவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரிகள், துப்பாக்கியின் ரிசிவர் பகுதியை திறந்து குண்டுகளை பரிசோதித்து பார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தும், எதற்காக சுடவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#WATCH Rifles fail to fire during the state funeral of former Bihar Chief Minister Jagannath Mishra, in Supaul. (21.8.19) pic.twitter.com/vBnSe7oNTt
— ANI (@ANI) August 22, 2019
மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகமாக இருந்த பகுதிகளில் ஒன்று பீகார். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில், அவசரத்திற்கு போலீசின் துப்பாக்கியே சுடவில்லை என்பதை பார்த்த நெட்டிசன்கள், இந்த வீடியோவை ஷேர் செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.