நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த ஆர்ஜேடி- காங்.- இடதுசாரிகள்!
பாட்னா: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்ற் விழாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் புறக்கணித்தன.
பீகார் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்கள்தான் பெற்றது. ஆகையால் நிதிஷ்குமார் ஆட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்தனர் என்பது ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் கருத்து.
பீகார் மக்களால் நிராகரிக்கபட்ட நிதிஷ்குமார் எப்படி மீண்டும் முதல்வராக முடியும்? என்பதும் ஆர்ஜேடி அணியின் கேள்வி. ஆனால் பாஜகவோ, தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது. அதனால்தான் மொத்தம் 125 இடங்களை மக்கள் அளித்துள்ளனர் என்கிறது.
இந்நிலையில் இன்று பாட்னாவில் நடைபெற்ற நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. மக்கள் தீர்ப்பை மதிக்காமல் நிதிஷ்குமார் முதல்வராவதை ஏற்க முடியாது என ஆர்ஜேடி அறிவித்துள்ளது.