சிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி!
Recommended Video
பாட்னா: மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் சிறையில் வாடி வரும் நிலையில் நடுவானில் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடியுள்ளார் அவரது மகன் தேஜஸ்வி யாதவ்.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையிலிருந்து வருகிறார்.
கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது? ஷாக்கிங் வீடியோ!
தனியார் விமானம்
அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் தேஜஸ்வி யாதவோ கடந்த 9-ஆம் தேதி 30ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அதுவும் தனியார் விமானத்தில் நடுவானில் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார்.
நெட்டிசன்கள்
அங்கேயே காலை உணவை நண்பர்களுக்கு வழங்கி மிகவும் ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்களை தேஜஸ்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கூறுகையில் பீகார் ஏழை மாநிலம் என யார் கூறியது?
ஆடம்பர செலவு
தேஜஸ்வியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடுவானில் தனியார் விமானத்தில் நடந்தது. ஏழைகளுக்காக பாடுபடுபவர் என தன்னை கூறிக் கொள்ளும் தேஜஸ்வி இது போன்று ஆடம்பரமாக செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
இன்னும் சிலரோ தந்தை லாலு சிறையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் மகன் இதுபோல் செய்வது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர். தேஜஸ்வியின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.