பூசாரி தொடர்ந்து பலாத்காரம் செய்கிறார்..ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்த பெண்.. கிறுகிறுத்து போன போலீசார்
பூசாரி கனவில் பலாத்காரம் செய்வதாக ஒரு பெண் புகார் தந்துள்ளார்
பாட்னா: தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவரே போலீஸில் நேரடியாக சென்று புகார் தந்துள்ளார்.. அந்த புகாரை வாங்கி படித்து பார்த்த போலீஸார், கிறுகிறுவென தலைசுற்றி கீழே விழுந்துள்ளனர்..!
பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசித்துவருகிறார் அந்த பெண்.. கல்யாணமாகிவிட்டது.. ஒரு மகனும் இருக்கிறார்.
இந்த மகனுக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை.. அதனால், கடந்த ஜனவரியில், காளி கோயிலில் ஒரு பூசாரியை சந்தித்து பேசியுள்ளார்.. அவர் பெயர் பிரசாந்த் சதுர்வேதி.
அடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது
மந்திரம்
தன் மகனின் உடல்நல பிரச்சனையை சொல்லவும், அந்த சதுர்வேதியும், உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திர தாயத்தை தந்து, ,சில சடங்கு முறைகளையும் சொல்லி தந்து அதை பின்பற்ற சொன்னார்... அதன்படியே அந்த பெண்ணும் வீட்டில் தாயத்து வைத்து சடங்குகள் செய்தார்.. ஆனால், 15 நாட்களில் அந்த மகன் இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்..
கனவு
மகன் இறந்ததையும் ஜீரணிக்கவே முடியவில்லை.. தன் மகன் எப்படி இறந்தான் என்று, மறுபடியும் காளிகோயிலுக்கு சென்று அந்த பூசாரியை சந்தித்து நேரில் கேட்டுள்ளார். இதற்கு சரியான பதிலை பூசாரி தரவில்லை போலும். இந்த சமயத்தில், திடீரென பூசாரி மீது பாலியல் புகார் தந்துள்ளார் அந்த பெண்.. பூசாரி தன்னை ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது இறந்துபோன மகன்தான் தன்னை காப்பாற்றியதாகவும் அந்த பெண் உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தார். .
கனவு
இதைதவிர, தூங்கும்போதெல்லாம் அந்த பூசாரி கனவில் வருவதாகவும், அப்போதும் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒரு புகார் மனுவையும் அளித்துள்ளார். கனவில் வந்து பூசாரி பலாத்காரம் செய்வதற்கு என்ன செய்ய முடியும் என்று போலீசார் திகைத்து போய்விட்டனர்.. எனினும் மனு மீதான நடவடிக்கையை கையில் எடுத்தனர்.. சம்பந்தப்பட்ட பூசாரியையும் விசாரித்தனர்.. பூசாரி பேசுவதை கேட்டு போலீசாருக்கு அதற்கு மேல் மண்டை காய்ந்துவிட்டது.
பார்த்ததுகூட இல்லை
இதை பற்றி ஒரு போலீசார் சொல்லும்போது, "பூசாரி சதுர்வேதிக்கு எதிராக எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததால், நாங்கள் அவரிடம் விசாரித்தோம்... ஆனால் அந்த பெண் யாரென்றே தனக்கு தெரியாது என்று பூசாரி சொல்கிறார்.. அந்த பெண்ணை ஒருமுறைகூட அவர் சந்தித்ததுகூட இல்லையாம்.. அதனால், பூசாரிக்கு எதிராக எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால், எழுத்து பூர்வமாக அவரது கருத்தை பதிவு செய்த பின்னர் அவரை விடுவித்தோம் என்றார்.