பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஷாக்.. பெண்ணை நாசம் செய்து.. துப்பாக்கியால் சுட்டு.. எரித்த கொடூரம்.. அதிரும் பீகார்!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து எரித்து கொன்றுள்ளனர்

Google Oneindia Tamil News

பாட்னா: இன்னும் தெலுங்கானா பெண் டாக்டரை நாசம் செய்து எரித்து கொன்ற சம்பவத்தின் அதிர்வலையே அடங்காத நிலையில், இன்னொரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இளம்பெண்ணை நாசம் செய்து, துப்பாக்கியால் சுட்டு, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்துள்ளனர்.

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ளது குகுதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பெண் மிக மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. பிறகு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.. இறுதியாக எரித்து சாம்பலாக்கி உள்ளனர்.

கருகிய சடலம்

கருகிய சடலம்

பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது.. இன்று காலை கருகிய நிலையில் அதனை போலீசார் கண்டெடுத்தனர். காட்டுப்பகுதியில் கருகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக பொதுமக்கள் பார்த்து, போலீசுக்கு சொல்லவும்தான் இந்த விஷயம் வெளியெ தெரிந்துள்ளது.

இடுப்பு பகுதி

இடுப்பு பகுதி

பெண் எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியதுமே, அந்த பகுதியில் ஊர் மக்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். முதலில் எரிந்து போனது ஆணா, பெண்ணா என்றே தெரியாமல் இருந்தது.. அந்த சடலத்தின் இடுப்புக்கு கீழே மொத்தமாக எரிந்துள்ளது. இதைவைத்துதான், அந்த சடலம் பெண் என்றும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

சடலம்

சடலம்

ஆனால் சம்பந்தப்பட்ட பெண் யார், சிறுமியா, பெரிய வயது நபரா, எந்த ஊர், என்ன வயது என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது. எனினும் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் தலையில் ஒரு துப்பாக்கி குண்டு உள்ளது. அதனால் சுட்டு கொன்று, பின்னரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

சம்பவ இடத்தில் 2 துப்பாக்கி குண்டுகளின் பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனிடையே, தடயவியல் சோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது 20 வயது பெண் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பெண்ணின் கொலையில் முழு தகவலும் வெளியாகும். ஆங்காங்கே இப்படி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டு வருவது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
young woman raped shot dead and burnt and bihar police recovered body
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X