பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடா நட்பு; கேடாய் முடியும்... கருணாநிதியை சொல்லியிருக்கிறார்… ராஜ்நாத் சிங் விளாசல்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: திமுக காங்கிரஸ் கூட்டணி மூழ்கும் கப்பல் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பெரம்பலூரில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திலிருந்து காங்கிரஸை பல வருடங்களுக்கு முன்னே விரட்டி அடித்து விட்டதாக கூறினார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மத்திய பாஜக அரசு காக்கும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

Congress - DMK corrupt alliance: Union Home Minister Rajnath Singh Campaign

ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருந்து துடைத்தெறியப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பலர் சிறையிலும் பலர் ஜாமீனிலும் இருக்கிறார்கள் என்றும் ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம் செய்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார்... பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சுஅரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார்... பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல என்றும் ஊழல் நிறைந்த கூட்டணி என்று கூறிய ராஜ்நாத் சிங், கூடா நட்பு; கேடாய் முடியும் என காங்கிரஸ் கூட்டணி பற்றி கருணாநிதியை கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அரியலூர் - பெரம்பலூர் இடையே ரயில் போக்குவரத்து வசதி செய்யப்படும் என்றும், பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்படும் எனவும் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

பாகிஸ்தானின் இறையாண்மையை மதிக்கிறேன், தீவிரவாத இலக்குகளை தான் குறிவைத்து அழிக்கிறோம், அதன் ராணுவ வீரர்களையோ மக்களையோ அல்ல எனவும் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார்.

English summary
Rajnath Singh In Perambalur : Congress - DMK corrupt alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X