பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருவாட்டு குழம்பு, இட்லி எடுத்துட்டு வா.. அதிர வைக்கும் எம்எல்ஏவின் லீலைகள்.. ஷாக்கில் பெரம்பலூர்

பெண்களை நாசம் செய்ததாக பெரம்பலூர் எம்எல்ஏ மீது புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களை நாசமாக்கிய அதிமுக எம்எல்ஏ.. ஷாக்கில் பெரம்பலூர்- வீடியோ

    பெரம்பலூர்: நம்பி வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டியது.. அதை திருட்டுத்தனமாக வீடியோ எடுக்க வேண்டியது.. பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி திரும்பவும் அதே பெண்களிடம் செக்ஸ் வைத்து கொள்வது.. இதுதான் அந்த அதிமுக எம்எல்ஏவுக்கு பொழைப்பாம்! இதில் கூட்டு பலாத்காரம் வேறு நடந்துள்ளது!

    பொள்ளாச்சி சம்பவம் போலவே மீண்டும் ஒரு கொடூரம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அதிமுக எம்எல்ஏதான் இந்த ஈன காரியத்தில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. இவருடன் நிருபர் என்று சொல்லி கொள்ளும் ஒருவரும் இதில் கூட்டு!

    சமூக வலைதளங்களில் முதலில் நண்பர்களாவது, பிறகு அவர்களுடன் நைசாக பழகி சீரழிப்பதுதான் இவர்களின் வேலையே.

    அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்

    நாசம்

    நாசம்

    இப்படிகூட்டு பலாத்காரம் செய்வதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்களை மிரட்டி மிரட்டி பணிய வைத்து நாசம் செய்திருக்கிறார்கள்.. பணம் பிடுங்கி வந்திருக்கிறார்கள். எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி பலருக்கு இதே பெண்களை விருந்தாக்கி இருக்கிறார்கள்.

    பாலியல் சமாச்சாரம்

    பாலியல் சமாச்சாரம்

    இதில் ஏராளமான பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். இது போல 20க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி கொண்டு தவிப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த எல்லா பாலியல் சமாச்சார கொடுமையும், பெரம்பலூரில் உள்ள ஸ்டார் ஓட்டலில்தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கருவாட்டு குழம்பு

    கருவாட்டு குழம்பு

    இப்படித்தான் ஒரு பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சொன்னதுடன், "ஜாலியா இருக்கலாம் வா.. கருவாட்டு குழம்பு, இட்லி செய்து எடுத்துட்டு வா" என்று அந்த எம்எல்ஏ சொன்னாராம்!

    வக்கீல் அருள்

    வக்கீல் அருள்

    இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட எஸ்பியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரை விலாவரியாக எஸ்பியிடம் அளித்துள்ளது ஒரு வக்கீல். அவர் பெயர் அருள். இவர் வக்கீல் மட்டுமில்லை, நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் கூட!

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் எல்லா தகவலையும் திரட்டி உள்ளார் அருள், இந்த புகாரை தந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாலியல் அத்துமீறல், கொலை மிரட்டலில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    வக்கீல் அருள் வழங்கிய புகாரினை அடுத்து, தனிப்படை அமைக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    Young Girls Molestation and took videos by Perambalur AIADMK MLA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X