பருப்பு வடை.. உளுந்து வடை.. அடடே பாயாசமும்.. அமெரிக்காவில் சூப்பர் பொங்கல்!
நாகர்கோவில்: இந்தியாவைப் போலவே, உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வழக்கமான உற்சாகத்துடன் இந்த வருடமும் கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவிலும் சூப்பர் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வீடுகளில் தனியாக கொண்டாடுவதோடு குடும்பங்களாக சேர்ந்தும் பொங்கல் கொண்டாடுவது அங்குள்ள தமிழர்களின் வழக்கமாகும்.
அதன்படி அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட ஒரு சந்தோஷப் பொங்கல் விழா குறித்த பதிவு இது. இங்கு பொங்கல் பண்டிகைக்கு லீவெல்லாம் கிடையாது பாஸ்.. அதற்காக நம்ம பாரம்பரிய கொண்டாட்டத்தை விட்டுட முடியுமா.. ஸோ, குடும்பங்களாக கூடி சின்னதாக, பெரிதாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,, பருப்பு வடை, உளுந்து வடை, பாயாசம், எலுமிச்சம் பழ சாதம் என கலந்து கட்டி பொங்கல் விழாவை தமிழர்கள் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
புத்தாடை அணிந்து, அதுவும் நம்ம ஊர் பட்டுப் பாவாடை, சேலை, வேட்டி அணிந்து, கெட் டூ கெதர் வைத்து கொண்டாடியுள்ளனர். பொங்கல் பண்டிகை, மதச் சார்பற்ற விழா என்பதால் அனைவருமே சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவில் அப்படிப்பட்ட ஒரு பொங்கல் கொண்டாட்டத்தைத்தான் பார்க்கிறோம்.
என்ன வீடியோ பார்க்கலாமா.. வாங்க பார்க்கலாம்.
- Inkpena சஹாயா