புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கணவர் கண் முன்பாகவே 3 பேர் கொண்ட கும்பல் மனைவியின் தாலிக் கொடி உள்பட 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளன.

புதுச்சேரி முல்லை நகரை சேர்ந்தவர் விநாயகம். பைனாசிரியர் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.

3 member gang loot woman in front of her husband

அப்போது வீட்டில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த விநாயகம் அவர்களைக் கவனித்தபடி நின்றிருந்தார். அப்போது அந்த 3 பேரில் இருவர் பைக்கிலேயே இருக்க ஒருவர் மட்டும் இறங்கி விநாயகத்திடம் நெருங்கினார்.

பின்னர் திடீரென பிரேமாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அப்படியே கொத்தாகப் பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்த பிரேமா தனது கழுத்தில் கிடந்த தாலியை இறுகிப் பற்றியபடி கூச்சலிட்டார். அலறினார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு பிரேமாவின் மகன் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். விநாயகமும் அவரது மகனும் திருடர்களிடம் மோதினர். ஆனால் 3 பேரும் சேர்ந்து விநாயகம், மகனை கடுமையாகத் தாக்கி விட்டு நகைகளுடன் ஓடி விட்டனர். 12 பவுன் நகைகளும் பறி போய் விட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மிகத் துணிகரமாக திருடர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திருடர்கள் தாக்குவதும், அவர்களுடன் விநாயகம், மகன் போராடுவதும் திருடர்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.

English summary
A three member gang attacked a woman and her husband and escaped with the booties in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X