புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
பிரதமர் மோடியின் ஒவ்வொரு தமிழகம் வருகையின் போதும் சமூக வலைதளங்களில் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காக இருப்பது வழக்கம். பிரதமர் மோடியின் இன்றைய பயணத்தின் போதும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி வந்த பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டி, கறுப்பு பலூன்களை சமூக ஜனநாயக இயக்கத்தினர் பறக்கவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கறுப்பு கொடி காட்டிய 30 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.