சாவு வீட்டிற்கு மாலையோடு சென்றவரை.. நடு ரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டு.. புதுச்சேரியில் ஷாக்!
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முக்கிய குற்றவாளியை நடுரோட்டில் வைத்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சாவு வீட்டிற்கு மாலையுடன் சென்றபோது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேந்த காங்கிரஸ் பிரமுகரான ஜோசப் என்பவரை கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் என்பவரை தமிழக போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
நேரம் பார்த்த கும்பல்
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினீல் வெளியே வந்திருந்த சந்திரசேகரை, காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஜோசப்பின் ஆதரவாளர்கள் தகுந்த நேரம் பார்த்து காத்திருந்துள்ளனர்.
சாவு வீட்டுக்கு சென்றார்
இந்நிலையில் இன்று சந்திரசேகர் தனது மனைவி சுமலதாவுடன், காலாப்பட்டிலுள்ள தனது வீட்டில் இருந்து பிம்ஸ் மருத்துவமனை வழியாக, மஞ்சகுப்பத்திலுள்ள நண்பர் வீட்டு துக்க நிகழ்விற்காக மாலை வாங்கிகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
வழிமறித்த கும்பல்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோசப்பின் ஆதரவாளர்கள் சந்திரசேகர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனை அருகில் சென்றபோது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து எங்கே செல்கிறீர்கள் என்று சந்திரசேகரனை கேட்டுள்ளனர்.
வெடிகுண்டு வீசி கொலை
உடனே சந்திரசேகரின் வாகனத்தின் முன்பு இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது மனைவியான சுமலதாவை கீழே தள்ளிவிட்டு சந்திர சேகர் மீது வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரசேகரனை அவரது மனைவியான சுமலதாவின் கண்முன் அறிவாளால் தலையையும், ஒரு கையையும் வெட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் சந்திரசேகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
போலீசார் தீவிர விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி, மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜோசப் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது ஆதராளவர்கள் குகன் என்பவர்தான் அறிவாளால் வெட்டியதாக சுமலதா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கு குற்றவாளியான குகனையும் அவனது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
நேரம் பார்த்த கும்பல்
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினீல் வெளியே வந்திருந்த சந்திரசேகரை, காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஜோசப்பின் ஆதரவாளர்கள் தகுந்த நேரம் பார்த்து காத்திருந்துள்ளனர்.
சாவு வீட்டுக்கு சென்றார்
இந்நிலையில் இன்று சந்திரசேகர் தனது மனைவி சுமலதாவுடன், காலாப்பட்டிலுள்ள தனது வீட்டில் இருந்து பிம்ஸ் மருத்துவமனை வழியாக, மஞ்சகுப்பத்திலுள்ள நண்பர் வீட்டு துக்க நிகழ்விற்காக மாலை வாங்கிகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
வழிமறித்த கும்பல்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோசப்பின் ஆதரவாளர்கள் சந்திரசேகர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனை அருகில் சென்றபோது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து எங்கே செல்கிறீர்கள் என்று சந்திரசேகரனை கேட்டுள்ளனர்.
வெடிகுண்டு வீசி கொலை
உடனே சந்திரசேகரின் வாகனத்தின் முன்பு இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது மனைவியான சுமலதாவை கீழே தள்ளிவிட்டு சந்திர சேகர் மீது வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரசேகரனை அவரது மனைவியான சுமலதாவின் கண்முன் அறிவாளால் தலையையும், ஒரு கையையும் வெட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் சந்திரசேகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
போலீசார் தீவிர விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி, மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜோசப் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது ஆதராளவர்கள் குகன் என்பவர்தான் அறிவாளால் வெட்டியதாக சுமலதா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கு குற்றவாளியான குகனையும் அவனது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.