புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனைவியுடன் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட்ட கணவர்.. தொண்டையில் சிக்கி பரிதாப மரணம்

பரோட்டா தொண்டையில் அடைத்து புது மாப்பிள்ளை உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புது பொண்டாட்டியோட செல்போனில் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட்டார் மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தொண்டையில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், புருஷோத்தமன். இவருக்கு 37 வயதாகிறது. தனியார் கார் கம்பெனியில் சூபர்வைசராக இருக்கிறார். இவருக்கு 6 மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆனது.

A man died while talking his wife over cellphone near Puducherry

மனைவி பெயர் சண்முகசுந்தரி. பெற்றோரை பார்க்க சொந்த ஊரான திருநெல்வேலிக்கு இவர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11.௦௦ மணிக்கு வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய புருஷோத்தமன் வரும்போதே சாப்பிட பரோட்டா பார்சல் வாங்கி கொண்டு வந்தார்.

பொட்டலத்தை பிரித்து வைத்து, சாப்பிட்டு கொண்டே, மற்றொரு பக்கம் செல்போனில் மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென புருஷோத்தமனுக்கு விக்கல் வந்துவிட்டது. போனில் பேசிய மனைவியோ, தண்ணி குடிங்க என்று சொன்னார்.

ஆனால் இந்த பக்கத்தில் இருந்து சத்தத்தையே காணோம். பதறிப் போன சண்முகசுந்தரி, அந்த ஊரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு போனைப் போட்டு, வீட்டுக்கு போய் என்ன ஆச்சு என்று பார்க்கும்படி கதறியவாறே சொன்னார். இதையடுத்து, விரைந்து வந்த சொந்தக்காரர்களும் உள்பக்கம் பூட்டியிருந்த கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது, வாயில் பரோட்டாவுடன் மயங்கி விழுந்து கிடந்தார் புருஷோத்தமன்.

அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடியபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பரோட்டோ தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டாலும், இப்படி ஒரு மரணம் மக்களுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது.

English summary
Near Puducherry, Newly married man suddenly died while he talking wife through phone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X