கடன் தொல்லையால் என் தம்பி தற்கொலை செய்யலை.. மிரட்டியிருக்காங்க.. ஆனந்தராஜ் பரபர புகார்
புதுச்சேரி: மிரட்டல் காரணமாகவே என் தம்பி தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி திருமுடி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கனகசபை. இவர் பிரபல திரைப்பட நடிகர் ஆன்ந்தராஜின் தம்பி ஆவார். திருமுடி நகரில் வசித்து வந்த கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனிடையே கனகசபை நேற்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாக தரவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் அவரது உடலானது கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ஏலச்சீட்டு காரணமாகவும் கடன் தொல்லை காரணமாகவும் இறந்ததாக தகவல்கள் வெளியாகியது.
இதையடுத்து தனது தம்பியின் மரணத்திற்கு விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், தனது தம்பி கடன் பிரச்சினைக்காக தற்கொலை செய்யது கொள்ளவில்லை. மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்.
தனது தம்பி சமீபத்தில் ஒரு வீடு வாங்கியதாகவும், அந்த வீடு சம்பந்தமாக சிலரால் மிரட்டப்பட்டதால் மனவேதனையில் இருந்த அவர், நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் சிலரை குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை பற்றி புதுச்சேரி காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. தன் தம்பியின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் தாம் எந்த தகவலையும் வெளியிட முடியாது என தெரிவித்தார்.