Amphan cyclone: ஆம்பனால் குளிர்ச்சியான புதுச்சேரி.. புதுச்சேரி மக்கள் ஹேப்பி..
புதுச்சேரி: வங்ககடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Recommended Video
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'ஆம்பன்' என பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் ஆம்பன் புயல் இன்று மாலை அதி தீவிர புயலாக மாறி வரும் 20 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்திற்கும், வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone amphan: வங்கக் கடலில் இன்று தீவிரமாக மாறும் ஆம்பன் புயல்.. தமிழகத்திற்கு என்ன வார்னிங்!
ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் மீனவர்கள் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், வங்ககடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.