புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகரானார் பாலன்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் துணை சபாநாயகராக ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் பதவியேற்றுக்கொண்டார்.
அவரை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் காலியாக இருந்த துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செயப்பட்டுள்ளதாக இன்று பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனை தொடர்ந்து துணை சபாநாயகராக பாலன் பேரவையில் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் சிவக்கொழுந்து, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பாலனை இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து பாலனுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.