புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் முடிஞ்சு போச்சு.. ஓரிரு நாட்களில் தகவல் வரும்.. முரளிதர ராவ் பரபர தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Muralithara Rao: ஓரிரு நாட்களில் தகவல் வரும்.. முரளிதர ராவ் பரபர தகவல்- வீடியோ

    புதுச்சேரி: லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதியாகி விட்டது. விரைவில் தகவல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

    லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி படு தீவிரமாகியுள்ளன கட்சிகள். கூட்டணி அமைப்பதிலும் தொகுதிப் பங்கீடு செய்வதிலும் மும்முரமாகியுள்ளன.

    தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமையவுள்ளன. கமல்ஹாசன் சிங்கிளாக சிங்கம் போல தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார். திமுக, அதிமுக தலைமையின் கீழ் திரளவுள்ள கட்சிகள் எது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளன.

    இறுதியான கூட்டணி

    இறுதியான கூட்டணி

    இந்த நிலையில் புதுச்சேரிக்கு வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மீனவர்களுடன் சந்திப்பு

    மீனவர்களுடன் சந்திப்பு

    புதுச்சேரிக்கு வந்த முரளிதரரா் அங்கு மீனவர்களைச் சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கூட்டணிக்கு மோடி விருப்பம்

    கூட்டணிக்கு மோடி விருப்பம்

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முரளிதரராவ் கூறுகையில், கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டிணி அமைத்து போட்டியிட்டது போல, இந்த தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    சில தினங்களில் அறிவிப்பு

    சில தினங்களில் அறிவிப்பு

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படும்.

    மர்மம் விலகுமா

    மர்மம் விலகுமா

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெரும் என முரளிதரராவ் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டணி முடிவாகி விட்டதாக முரளிதர ராவ் கூறியுள்ளதால் விரைவில் இந்த கூட்டணி குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கலாம்.

    English summary
    BJP leader Muralithara Rao has said that his party has finalised the alliance in TN and Puducherry, all the details will be announced within few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X