முன்விரோதம்.. மதுபானக் கடையில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு சரமாரியாக குத்து
Recommended Video
புதுச்சேரி: தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூரை சேர்ந்தவர் நேரு. அதிமுகவை சேர்ந்த இவரின் மனைவி எம்.புதூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கிக்கும் தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேரு புதுச்சேரி மாநிலம் சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுக்கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆரங்கிக்கும், நேருவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், ஆரங்கியை தாக்கினர். இதனை அறிந்து அங்கு திரண்ட ஆரங்கியின் ஆதரவாளர்கள், நேரு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
அப்போ தெரியலையா.. ப்ளீஸ்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. பெண் போலீஸிடம் கெஞ்சி சண்டை போட்ட இளைஞர்!
படுகாயமடைந்த நேரு மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேருவிற்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.