கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் முடுக்கி விடப் போகிறோம்.. நாராயணசாமி அரசு
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கிராமங்கள் தோறும் போராட்டத்தை முடுக்கி விடப் போவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தனியார் ஓட்டலில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் பேசியதாவது... மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள கிரண்பேடியை கண்டித்து, தொடர்ச்சியாக 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியும், ஆளும் அரசு முன்வைத்த கோரிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறைவேற்றவில்லை.
ஆளுநருக்கு எதிராக புதுச்சேரி முழுவதும் கிராமங்கள் தோறும் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.
அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்று நமச்சிவாயம் குற்றம்சாட்டினார்.