புதுவை சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா.. கலக்கத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சோதனை செய்த பின்பே சட்டப்பேரவை உள்ளே செல்கின்றனர்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மேலும் தற்போது 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 நபர்களில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகம், முதலமைச்சர் அறை உள்ளிட்ட அமைச்சர்கள் அறைகள் மற்றும் சட்டமன்றம் கூடும் அவை உள்ளிட்டவைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பின்னரே அலுவலகத்தில் சென்றார்கள். மேலும் தொற்று பாதித்த நபருடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றது.
67 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை.. பொதுமக்கள் ஹேப்பி