புதுச்சேரி சட்டசபை இடைத் தேர்தல்.. திமுக அபார வெற்றி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1,539 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூன்று சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நெடுஞ்செழியன் 9,367வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசன் 10,906 வாக்குகளை பெற்றனர்.
என் ஆர். காங்.
இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை விட 1,539 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
திமுகவுக்கு வெற்றி
இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே வந்த வெங்கடேசனை திமுக தொண்டர்கள் தோளில் தூக்கி கோஷங்களை எழுப்பி கொண்டாடினர்.
வெற்றி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், வெற்றியை தளபதி ஸ்டாலினுக்கு காணிக்கை அளிப்பதாக தெரிவித்தார் அவர்.
வாக்காளர்களுக்கு நன்றி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலின்போது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும், வாக்களித்த வாக்காளர்களுக்கு தனது நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.