Puducherry Floor Test Live: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.. ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி
புதுவை: புதுவை சட்டசபையில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது.
Recommended Video
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவின் எம்.எல்.ஏ. வெங்கடேசனும் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜினாமா செய்தார்.
ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
Puducherry Chief Minister submits resignation to the Lieutenant Governor after losing majority in the Assembly pic.twitter.com/Y2posu1zXQ
— ANI (@ANI) February 22, 2021