புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

புதுச்சேரியில் 13 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

 மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு!

அதிகரிக்கும் பாதிப்பு

அதிகரிக்கும் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன. நாடு முழுவதும் 15,000-க்கு கீழ் இருந்த பாதிப்புகள் தற்போது 15,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.

தடுப்பூசி போடும் பணி தீவிரம்

தடுப்பூசி போடும் பணி தீவிரம்

இந்தியாவில் நிரந்தரமாக குடியிருக்கும் கொரோனாவை விரட்டியடிக்க கோவிஷில்டு, கோவாக்சின் என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

நாராயணசாமி தடுப்பூசி போட்டார்

நாராயணசாமி தடுப்பூசி போட்டார்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 13 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரிமுன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி

புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரசில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் பலர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Puducherry Chief Minister Narayanasamy and MP Vaithiyalingam were vaccinated against corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X