புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் பேக்கரியின் கூரையை பிரிச்ச கொள்ளை கும்பலுக்கு.. கொட்டியது தங்ககாசு.. பணமழை!

Google Oneindia Tamil News

Recommended Video

    பேக்கரியின் மேற்கூரையை தகர்த்து 5 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டு

    புதுச்சேரி: புதுச்சேரியில் பேக்கரி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் அப்பகுதியில் கடந்த 5 வருடங்களாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் பேக்கரி கடையை நேற்று முன்தினம் பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    gold coins, money theft in the bakery at Puducherry

    இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.

    gold coins, money theft in the bakery at Puducherry

    மேலும் மர்ம நபர்கள் கடையின் மேல்கூறையை உடைத்து உள்ளே வந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமிரா பதிவு செய்யும் ஹார்டுடிஸ்கையும் எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    gold coins, money theft in the bakery at Puducherry

    மேலும் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேக்கரி கடையின் மேல்கூறையை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    gold coins, money theft in the bakery at Puducherry, police enquery
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X