புதுச்சேரி துறைமுகத்தில் பேரபாயத்தை குறிக்கும் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி: நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் பேரபாயத்தை குறிக்கும் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக இன்று மதியம் வலுப்பெறுகிறது. 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். கனமழை கொட்டும் என்றும், இன்று இரவு புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை இந்த எச்சரிக்கை கூண்டு குறிக்கிறது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்காலில் 8ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்
புதுவை மற்றும் கடலூரில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மீனவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் இருந்தவர்கள் முறையான அறிவுறுத்தலின்படி புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்
10-ம் எண் புயல் கூண்டு ஏன்?
மிக கடுமையான புயல் துறைமுகப் பகுதியிலோ அல்லது மிக அருகிலோ கரையைக் கடக்கும் நிலையில் துறைமுகங்களில் பேரபாயம் என்பதை குறிக்கும் வகையில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்படும். காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் புதுவை, கடலூர் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.