மருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி
புதுவை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியின் போது மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜிப்மரில் மருத்துவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டபடி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
Recommended Video
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் கடந்த 31-ம் தேதி பணியில் இருந்த மருத்துவர் ஆதேன் குணசேகரனுக்கும், ஆண் செவிலியர் செந்தில் என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில் மருத்துவரை தாக்கியதாக புகார் கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் பணி பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் கடந்த 2-ம் தேதி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 100% பேருக்கும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை அவசியம்.. ஐசிஎம்ஆர்
48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததால் மருத்துவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்திற்கு இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் அமைதி பேரணி நடத்தப்பட்டது. ஜிப்மர் உள்ளிருப்பு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர்.
மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பணி பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.