"வாடகை கேட்பியா'.. வீட்டுக்கு வந்த ஹவுஸ் ஓனரை அரிவாளாலேயே வெட்டி கொன்ற இளைஞர்..!
வீட்டு உரிமையாளரை ஓட ஓட வெட்டி கொன்ற பயங்கரம் புதுச்சேரியில் நடந்துள்ளது
புதுச்சேரி: ஹவுஸ் ஓனர் பெரிசா ஒன்னும் கேட்டுடலை.. வாடகைதான் கேட்டார்.. அதுக்கே அருண் அரிவாளை கொண்டு வந்து ஹவுஸ் ஓனரை வெட்டிட்டார்.
புதுச்சேரி, பாக்குமுடையான்பேட் ஜீவா காலனியை சேர்ந்தவர் புருஷோத்தமன்... இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 5 வீடுகள் இருக்கிறது.
இதில் 4 வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு வீட்டில் இவர் குடியிருக்கிறார்.. இதில் ஒரு வீட்டில்தான் அருண் என்பவர் குடியிருந்து வருகிறார்.. ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
வாடகைக்கு குடியிருப்போர் இருவருக்கு கொரோனா.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஓனர்.. போலீஸார் எச்சரிக்கை
அருண்
தற்போது வேலை இல்லாததாலும், கையில் காசு இல்லாததாலும், கடந்த சில மாதங்களாக அருண் சரியாக வாடகை தரவில்லை போலும்.. இதனாலேயே புருஷோத்தமனுக்கும், அருணுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
வெட்டு
அப்படித்தான் நேற்றும் புருஷோத்தமன் வாடகை கேட்க அருண் வீட்டிற்கு சென்றார்.. திரும்பவும் 2 பேருக்கும் சண்டை வந்துவிட்டது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அருண் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து ஹவுஸ் ஓனரை சரமாரியாக வெட்டினார். இதில் புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அலறினார்.
போலீஸ்
அதற்குள் அக்கம்பக்கத்தினர் கோரிமேடு போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிதாபம்
இந்த லாக்டவுன் காலத்தில் ஹவுஸ் ஓனர்கள், வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்று தமிழக அரசும், கோர்ட்டும் தெரிவித்திருந்தது. இந்த வாடகையை நம்பி நிறைய பேர் பிழைப்பு ஓட்டுபவர்களும் உண்டு.. அவர்கள் நிலைமை பரிதாபம்தான்.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில், வாடகை தர முடியாதவர்கள் நிலைமையும் அதைவிட பரிதாபம்தான்.. இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் செய்ய போகுதோ!