லோக்சபா தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல்!
புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடக்கிறது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடக்கிறது. வெங்கட்டா நகரில் இன்று ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 59 தொகுதிகளில் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
5 கட்டங்களாக இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும். இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் புதுவையில் ஒரு தொகுதியில் மட்டும் மறுதேர்தல் நடக்க உள்ளது. வெங்கட்டா நகரில் இன்று ஒரு தொகுதியில் மறுதேர்தல் நடக்கிறது.
நான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்?
பொதுவாக ஒரு தேர்தல் நடக்கும் முன், வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த மாதிரி வாக்குப்பதிவுகள் சரி செய்யப்பட்டு பின் அது அழிக்கப்படும்.
ஆனால் வெங்கட்டா நகரில் அப்படி மாதிரி வாக்குகளை அழிக்காமல் தேர்தல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவில் குளறுபடி நடந்து உள்ளது. இதையடுத்து தற்போது அங்கு மட்டும் மறுதேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை அங்கு தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் குறித்து நேற்று மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.