இதப்பாருங்க மேடம்.. பேடியிடம் வாட்ச்சுக்கு விளக்கமளித்த கட்கரி.. உத்துப் பார்த்த நாராயணசாமி!
புதுச்சேரி: அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதுச்சேரி விமான நிலையத்தில் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.
Recommended Video
காரைக்கால் என்.ஐ.டி.யில் நடைபெறும் 6 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி வந்தார். அவரை புதுச்சேரி விமான நிலையத்தில், மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.
அப்போது விமான நிலைய ஓடு பாதையிலிருந்து கிரண்பேடி மற்றும் நாராயணசாமிக்கு நடுவே நடந்து வந்து கொண்டிருந்த நிதின் கட்கரி, கிரண்பேடியிடம் நீண்ட நேரம் ஹிந்தியில் ஏதோ பேசினார். திடீரென நின்ற கட்கரி, தனது கையில் கட்டியிருந்த வாட்ச்சை கழட்டி, கிரண்பேடியிடம் காண்பித்து மேடம் இது டைட்டன் வாட்ச் தெரியுமா? என ஏதோ வாட்ச்சை பற்றி விளக்கம் அளித்தார்.
அப்போது அந்த வாட்ச்சை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அருகில் இருந்தவர் உற்றுபார்த்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு நிதின் கட்கரியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒரே ஹெலிகாப்டரில் காரைக்காலுக்கு சென்றனர்.
காரைக்கால் என்.ஐ.டி.யில் நடைபெறும் 6 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி வந்தார். அவரை புதுச்சேரி விமான நிலையத்தில், மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.