கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசி செல்லும் கொடுமையான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரி மூலகுளம் அருகே கோபாலன்கடை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கோபாலன்கடை மயானத்திற்கு அவரது உடலை கொண்டு சென்ற வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர், அவரது உடலை சவக்குழியில் வீசி அதன்பிறகு உள்ளே தள்ளும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் உடலை வீசிச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்!