முற்றும் மோதல்.. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்.. புதுவை முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended Video
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - நாராயணசாமி அறிவிப்பு- வீடியோ
புதுவை: கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் தொடரும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் கிரண்பேடி அனுமதி தர வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு தருவதில்லை என்பதே முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டாகும்.
இதை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிரண் பேடியோ டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். இதையடுத்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
Comments
English summary
Pondicherry CM Narayanasamy announces that protest will continue until their demands fulfilled by Lieutenant Governor Kiran Bedi.