புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தரம் தாழ்ந்து விட்டார் பிரேமலதா விஜயகாந்த்... நாராயணசாமி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தரம் தாழ்ந்து விட்டார் பிரேமலதா விஜயகாந்த் - நாராயணசாமி

    புதுச்சேரி: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரேமலதாவை கடுமையாக சாடியுள்ளார்.

    கூட்டணி பேரம் படியாததால் திமுகவைப் பற்றி பிரேமலதா தவறாக பேசி வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    narayanasamy slams premalatha vijayakanth

    புதுச்சேரி வைஷாலி வீதியில் புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது...

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக திமுகவை பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தரக்குறைவான விமர்சனம் செய்து வருகிறார். து அவருடைய அரசியலுக்கு ஏற்றதல்ல.

    narayanasamy slams premalatha vijayakanth

    தேமுதிக திமுகவுடனும், அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசினார்கள். ஆனால் அந்த பேரம் எடுபடவில்லை. திமுகவின் கதவு மூடப்பட்டுவிட்டது என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதன்பிறகு தேமுதிகவினர் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    டேய் பொறுடா.. இன்னும் எக்சாமே முடியல! டேய் பொறுடா.. இன்னும் எக்சாமே முடியல!

    இதற்கிடையில் பிரேமலதா தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம். இதிலிருந்து பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பது தெரிகிறது. தேமுதிக மக்கள் மத்தியில் செல்லும்போது மக்கள் கண்டிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதாவை திரும்பி பார்க்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜெயலலிதா, ரங்கசாமி தன்னை முதுகில் குத்துவிட்டார் அதனால் ரங்கசாமிக்கு போடுகிற ஓட்டு செல்லாத ஓட்டு என ஜெயலலிதா பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதிமுகவுடன் ரங்கசாமி தற்போது வைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

    narayanasamy slams premalatha vijayakanth

    ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள் என அதிமுகவினர் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளதிலிருந்தே ரங்கசாமி சொந்த காலில் நிற்க தெரியாதவர் என ரங்கசாமியை முதலமைச்சர் நாராயணசாமி சாடினார்.

    English summary
    Puducherry CM Narayanasamy has blasted DMDK treasurer Premalatha Vijayakanth for her half backed comments on Politicians and media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X