புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்!

புதுச்சேரி ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரவுடி ஜிம் பாண்டியனின் கொடூர கொலையில் திடீர் திருப்பம்!

    புதுவை: ரவுடி ஜிம் பாண்டியனின் தலை துண்டாக விழுந்துவிட்டது... அஸ்வின் என்பவருடன் ஏற்பட்ட தகராறுதான் இந்த கொடூர கொலைக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளதால், வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    அரியாங்குப்பம் சுப்பையாநகர், பாரதி வீதியை சேர்ந்தவர்தான் ஜிம் பாண்டியன். 26 வயதாகிறது. இந்த ஏரியா ரவுடி இவர்... ஏகப்பட்ட அடிதடி, கொலை முயற்சி, திருட்டு கேஸ்கள் இவர் மீது உள்ளன.

    நேற்று மாலை இருட்டும் நேரம்.. வாலிபால் கிரவுண்டில் செல்போனில் பேசி கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமும் அங்கு இல்லை. அப்போதுதான், திடுதிப்பென்று 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கையில் வெடிகுண்டு, கத்தி, அரிவாள் இருந்தன.

    வெடிகுண்டு

    வெடிகுண்டு

    இதை கண்டு அலறிய ஜிம் பாண்டியன் அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தார். இப்படி தப்பித்து ஓடக்கூடும் என்றுதான் அவர்கள், கையிலிருந்த வெடிகுண்டை தூக்கி ஜிம் பாண்டியன் மீது வீசினார்கள். ஆனால், அது கீழே விழுந்து வெடித்தது. திரும்பவும் விடாமல் விரட்டி சென்றனர் அந்த 6 பேரும்.. ஆனால் ஜிம் பாண்டியன் காம்பவுன் சுவர் மீது ஏறி குதித்து தப்பித்து குதித்துவிடலாம் என்று முயற்சி செய்தார்.

    சுற்றி வளைப்பு

    சுற்றி வளைப்பு

    ஆனால், பக்கத்து பில்டிங்குக்கும், காம்பவுண்ட் சுவருக்கும் நடுவுல இருக்கும் சந்தில் விழுந்துவிட்டார். இதனால், அந்த கும்பல் சந்துக்குள்ளேயே ஜிம் பாண்டியனை சுற்றிவளைத்து கொண்டது. அதனால் எந்த பக்கமும் ஓட முடியாமல் தவித்த ஜிம் பாண்டியனை அரிவாளால் வெட்டியது. தலைதுண்டாக தொங்கிவிட்டது.. இதை பார்த்த பிறகுதான் அந்த கும்பல் தப்பி ஓடியது.

    முன்விரோதம்

    முன்விரோதம்

    தகவலறிந்து புதுவை போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நீடிக்கிறது. இப்போது, கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வின்.. இவருக்கும் ஜிம் பாண்டியனுக்கும் முன்பகை இருந்துள்ளதாக தெரிகிறது.

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    போன தீபாவளி அன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்தளாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வின் கூட்டாளிகள்தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்பது தற்போது தெரியவந்துள்ளதால், கொலையாளிகளை மிக தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். அஸ்வின் பிடிபட்டால்தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்கிறார்கள்.

    English summary
    puducherry near ariyankuppam, rowdy gym pandian killed by a gang due to prejudice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X