புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (ஆகஸ்ட் 5) மாலை அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மற்றும் மகன்கள் இருவர், மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48895 கொரோனா கேஸ்கள்.. மிக மோசமான நாள்!
Comments
English summary
Pudhucherry State Social Welfare Minister Kandasamy and his youngest son Vignesh have been confirmed to have a corona infection.
Story first published: Thursday, August 6, 2020, 1:09 [IST]